பொருளாதாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மாற்றினால் நாடு மீண்டும் பாதாளத்தில் விழும் என சர்வதேச நாணய நிதியம் கருதுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அமைப்பின் தூதுக்குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்ததன் பின்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ருவன்வெல்லவில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வருகை தந்த தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய பீட்டர் ப்ரூவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தை காலாண்டு முதல் காலாண்டு வரை மதிப்பீடு செய்ததாக அவர் கூறினார்.
அரச வருவாயை அதிகரிப்பது, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, அன்னிய கையிருப்பை அதிகரிப்பது குறித்து மதிப்பீடு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
பொருளாதாரம் தொடர்பில் சிலர் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.