follow the truth

follow the truth

August, 27, 2025
Homeஉள்நாடுஐ. ம. ச எம்.பிக்கள் இன்று முதல் நாடாளுமன்ற அமர்வில்

ஐ. ம. ச எம்.பிக்கள் இன்று முதல் நாடாளுமன்ற அமர்வில்

Published on

நாடாளுமன்றத்தில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் கடந்த இரண்டு தினங்களாக சபை அமர்வுகளை புறக்கணித்திருந்த நிலையில் இன்றைய தினம் வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆளுந்தரப்பு உறுப்பினர்களின் அச்சுறுத்தலை அடுத்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பிரதான எதிர்க்கட்சியினர் சபை அமர்வுகளை புறக்கணித்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று பிற்பகல் சபாநாயகருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, கயந்த கருணாதிலக, முஜிபூர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் சந்தித்திருந்தனர்.  மேலும் இன்று முதல் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அவர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...