follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்துனிசியா பிரதமர் திடீர் பதவிநீக்கம்

துனிசியா பிரதமர் திடீர் பதவிநீக்கம்

Published on

துனிசியா ஜனாதிபதி கைஸ் சையத் அந்நாட்டு பிரதமர் அகமது ஹச்சானியை (Ahmed Hachani) எவ்வித காரணமும் தெரிவிக்காமல் பதவி நீக்கம் செய்துள்ளார்.
இவருக்கு பதிலாக துனிசியாவின் புதிய பிரதமராக அந்நாட்டு அமைச்சர் கமேல் மதௌரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக துனிசியா ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி ஹச்சானி துனிசியா பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இவர் நஜிலா பௌடனை தொடர்ந்து துனிசியா பிரதமராக பதவியேற்றார். முன்னதாக நஜிலா பௌடனும், பிரதமர் பதவியில் இருந்து எவ்வித காரணமும் இன்றி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று கைஸ் சையத் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு ஆணை மூலம் ஆட்சி செய்வதாக அறிவித்தார். இதற்கு ஏற்ப அந்நாட்டு அரசியலமைப்பு 2022 ஆம் ஆண்டு மாற்றி எழுதப்பட்டது.

அதன்படி துனிசியாவில் ஜனாதிபதிக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு குறைந்த அளவிலான அதிகாரத்தை வழங்கும் வகையில் மாற்றப்பட்டது. தற்போது பிரதமரமாக பொறுப்பேறகும் மௌதரி கடந்த மே மாதம் தான் அமைச்சரவையில் இடம்பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...