எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிய சமசமாஜக் கட்சிக்கான கட்டுப்பணத்தை தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த விக்கிரமசிங்க வைப்பிலிட்டுள்ளார்.
ராஜகிரியில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை இன்று (09) வைப்பிலிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், அபே ஜனபல கட்சி இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பொறியியலாளர் கீர்த்தி விக்கிரமரத்னவிற்கு கட்டுப்பணத்தை இன்று வைப்பிலிட்டுள்ளது.