ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) புத்தளம் தேர்தல் தொகுதியின் புதிய இணை அமைப்பாளராக முன்னாள் புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்கள் கட்சியின் தலைவரும் 2024 ஜனாதிபதி வேட்பாளருமான கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று(9) பிற்பகல் கொழும்பிலுள்ள கட்சி தலைமையகத்தில் இந்நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.