follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜீவன் யாருக்கு ஆதரவு?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜீவன் யாருக்கு ஆதரவு?

Published on

எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூடவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர்களுடனான சந்திப்பில் கலந்துக்கொண்டு உறையாற்றும் போது அமைச்சரும் இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர்களுடனான சந்திப்பானது இன்றைய தினம்(10) கண்டியில் இடம்பெற்றது.

அதாவது எதிர்வரும் 18ஆம் திகதி கொட்டகலை CLF வாளாகத்தில் கூடவுள்ள தேசிய சபையினூடாக 2024ஆம் ஆண்டின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக இந்த தேசிய சபை கூடவுள்ளதாக இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மேலும் கருத்துறைத்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நிகழ்வில் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஸ்வரன், அனுராத ஜெயரத்ன, முன்னாள் அமைச்சர் மனுச நானயக்கார, மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, இ.தொ.கா பிரதி பொதுச்செயலாளர் செல்லமுத்து, கண்டி மாவட்ட அரசியல் பிரமுகர்கள் உட்பட பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

“நான் அமைச்சரவை அமைச்சராகப் பதவியேற்று ஒரு வருடம் ஆகிறது, இதன் போது என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். கடந்த வருடத்தில் கண்டியில் மாவட்டத்தில் மாத்திரம் தோட்ட உட்கட்டமைப்புக்காக ரூ.160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது முன்னெப்போதும் இல்லாத கனிசமான அளவாகவும்.

இந்திய அரசின் ஆதரவுடன் கண்டி மற்றும் பதுளையில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையங்களை நிறுவுவதற்கும் எமக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மலைநாட்டில் சுமார் ஒரு மில்லியன் மக்கள்தொகை கொண்டிருந்தாலும்,
பெருந்தோட்டத் துறையில் மட்டும் 115,000 பேர் பணியாற்றுகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைக் கோரி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நடைமுறைகளை முன்னெடுத்துள்ளார். மலையகத்தின் அபிவிருத்தி மற்றும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும், பல தோட்டக் கம்பனிகள் சம்பள உயர்வுக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளனர். இதேவேலைதான் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை தொழில் அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது இதன் போது தீர்க்கமான சாதக தன்மை வாய்ந்த பதில் கிடைக்கப்பெறும் என நம்பிக்கை தெரிவிக்கிறேன்..” அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...