follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தேர்தல் சின்னங்கள் வௌியீடு

தேர்தல் சின்னங்கள் வௌியீடு

Published on

ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி மூலம் தேர்தல் சின்னங்கள் வௌியிடப்பட்டுள்ளதுடன், அவற்றில் 206 சின்னங்கள் காணப்படுகின்றன.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்று (09) நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பானவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேசிய முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுக்கு 112 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் நேற்று வரை மொத்தம் 269 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன

அந்த முறைப்பாடுகளில் வன்முறைச் செயல்கள் தொடர்பான ஒரு முறைப்பாடும் வேறு 02 முறைப்பாடுகளும் அடங்கியுள்ளன.

ஏனைய 266 முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறியவை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...