follow the truth

follow the truth

August, 11, 2025
HomeTOP2தப்பியோடிய ஹசீனா அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

தப்பியோடிய ஹசீனா அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

Published on

தன்னை ஆட்சியில் இருந்து வெளியேற்றும் சதியின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக எதிர்ப்புகளை எதிர்கொண்டு இராஜினாமா செய்த பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த செயின்ட் மார்ட்டின் தீவுகளின் மீது இறையாண்மையை வழங்கியிருந்தால், தான் தொடர்ந்தும் பதவியில் இருந்திருக்க முடிந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற பிறகு முதல் முறையாக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், நாட்டில் வன்முறைகள் மேலும் வளர்ச்சியடைவதைத் தடுப்பதற்காகவே தனது இராஜினாமா என்று குறிப்பிட்டுள்ள ஷேக் ஹசீனா, தீவிரவாதிகளிடம் விழ வேண்டாம் என்று பங்களாதேஷ் மக்களைக் கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...