follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1அனுர பிரியதர்ஷன தலைமையிலான புதிய முன்னணி

அனுர பிரியதர்ஷன தலைமையிலான புதிய முன்னணி

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து ஐக்கிய மக்கள் முன்னணி என இன்று (14) கூட்டணி அமைத்துள்ளன.

இதற்கு முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தலைமை தாங்குகிறார்.

பொதுச் செயலாளராக லசந்த அழகியவன்னவும் பொருளாளராக சாமர சம்பத் நியமிக்கப்பட்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நிமல் லன்சா உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்ட புதிய கூட்டணி மற்றும் பல கட்சிகள் மற்றும் குழுக்கள் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் முன்னணியாக இன்று (14) கொழும்பில் ஒன்றிணைந்தன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவன்ன, முன்னணியின் நிலைப்பாடுகளை அறிவித்தார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட 21 பேர் கொண்ட தலைமைத்துவ சபையும் அந்த முன்னணிக்காக நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய முன்னணி எதிர்வரும் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...