follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1அனுர பிரியதர்ஷன தலைமையிலான புதிய முன்னணி

அனுர பிரியதர்ஷன தலைமையிலான புதிய முன்னணி

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து ஐக்கிய மக்கள் முன்னணி என இன்று (14) கூட்டணி அமைத்துள்ளன.

இதற்கு முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தலைமை தாங்குகிறார்.

பொதுச் செயலாளராக லசந்த அழகியவன்னவும் பொருளாளராக சாமர சம்பத் நியமிக்கப்பட்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நிமல் லன்சா உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்ட புதிய கூட்டணி மற்றும் பல கட்சிகள் மற்றும் குழுக்கள் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் முன்னணியாக இன்று (14) கொழும்பில் ஒன்றிணைந்தன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவன்ன, முன்னணியின் நிலைப்பாடுகளை அறிவித்தார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட 21 பேர் கொண்ட தலைமைத்துவ சபையும் அந்த முன்னணிக்காக நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய முன்னணி எதிர்வரும் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...