follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉலகம்ஆப்பிரிக்காவில் ஆட்டம்காட்டும் குரங்கு அம்மை தொற்று

ஆப்பிரிக்காவில் ஆட்டம்காட்டும் குரங்கு அம்மை தொற்று

Published on

ஆப்பிரிக்க நாடுகளில் பரவும் ‘Mpox’ அல்லது ‘குரங்கு அம்மை’ வைரஸ் தொடர்பாக அவசர நிலையை பிரகடனப்படுத்த உலக சுகாதார நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

‘Mpox’ அல்லது ‘குரங்கு அம்மை’ பரவுவது உலகளாவிய பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது ‘Mpox’ என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வகை பயங்கரமானது என்று கூறப்படுகிறது. புதிய திரிபு 13 நாடுகளுக்கு பரவியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

கொங்கோ ஜனநாயக குடியரசில் மட்டும் குரங்கு அம்மை தொற்றினால் 450 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

புருண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகண்டா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் ‘Mpox’ என்ற புதிய விகாரம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் ‘Mpox’ என்ற புதிய விகாரம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். உலகளாவிய ஆபத்தை உருவாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தனது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளார்.

‘குரங்கு அம்மை’ வைரஸ் முதன்முதலில் 1958 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க குரங்குகளின் உடலில் இருந்து கண்டறியப்பட்டது. அதனால்தான் இதற்கு ‘குரங்கு அம்மை’ என்று பெயர்.
குரங்குகள் மட்டுமின்றி, எலி, அணில் போன்ற பாலூட்டிகள் மூலமாகவும் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. ‘குரங்கு அம்மை’ என்பது சிக்கன் குனியா போன்றது.

குரங்கு அம்மை தொற்றின் முக்கிய அறிகுறி காய்ச்சல் மற்றும் தோல் கொப்புளங்கள் ஆகும்.

‘குரங்கு அம்மை’ ஒரு தீவிர நோய் அல்ல, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து நோய் விரைவில் குணமாகலாம் அல்லது சிக்கல்களை உருவாக்கலாம். ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களுக்கு ‘குரங்கு அம்மை’ வைரஸ் பரவுவது பொதுவானது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...