follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1வாக்கு அட்டைகள் விநியோகம் தொடர்பான விசேட அறிவிப்பு

வாக்கு அட்டைகள் விநியோகம் தொடர்பான விசேட அறிவிப்பு

Published on

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள் விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த விநியோகம் இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.

அன்றைய தினம் வீட்டிலேயே தங்கி அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

வீடு வீடாகச் சென்று வாக்கு அட்டைகள் விநியோகம் செப்டம்பர் 14 ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும் அதன் பிறகு வீடு வீடாகச் சென்று வாக்கு அட்டைகள் விநியோகம் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேர்தல் நாள் வரை, அவர் கடிதங்களைப் பெறும் தபால் நிலையத்திற்குச் சென்று, சாதாரண நேரங்களில் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தி, தனது கையொப்பத்தைப் பயன்படுத்தி தனக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகளை பெற முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 17,140,280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 1,148,258 பேர் புதிய வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...