follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ராமன்ய மகா நிகாயவின் தலைவரை சந்தித்தார் ஜனாதிபதி

ராமன்ய மகா நிகாயவின் தலைவரை சந்தித்தார் ஜனாதிபதி

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) முற்பகல் நாரஹேன்பிட்டியில் உள்ள ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாய சங்கத் தலைமையகத்திற்குச் சென்று ராமன்ய நிகாயவின் மகாநாயக்க தேரர் அக்கமஹா பண்டித மகுலேவே விமலாபிதான தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் ஜனாதிபதி மகாநாயக்கர் மகா சங்கத்தினருடன் சிறிது நேரம் கலந்துரையாடியதுடன் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் மகா சங்கத்தினருக்கு அறிவித்தார்.

அத்துடன் பிரிவேனா கல்வி தொடர்பான பிரச்சினைகள் புனித பூமி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்தும் ஜனாதிபதி மகாநாயக்க தேரருக்கு அறிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...