follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுவீழ்ச்சியடைந்த நாட்டை ஸ்திர நிலைக்கு கொண்டுந்துள்ள ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க மக்கள் அணி திரள...

வீழ்ச்சியடைந்த நாட்டை ஸ்திர நிலைக்கு கொண்டுந்துள்ள ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க மக்கள் அணி திரள வேண்டும்

Published on

வீழ்ச்சியடைந்த நாட்டை ஸ்திர நிலைக்கு கொண்டுந்துள்ள ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க மக்கள் அணி திரள வேண்டும் என
முஸ்லிம் இடது முன்னணியின் பொதுச் செயலாளர் எம் ஆர் எம் பைசால் தெரிவிக்கிறார்.

நாட்டை அபிடிவிருத்தி செய்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே முடியும். அதற்கான வேலைத்திட்டங்களும் அவரிடம் இருக்கின்றன. வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை குறுகிய காலத்தில் ஸ்திர நிலைக்கு கொண்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்துகொள்ள மக்கள் முன்வர வேண்டும் என முஸ்லிம் இடது முன்னணியின் பொதுச் செயலாளர் எம் ஆர் எம் பைசால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக, நீண்டகாலமாக முஸ்லிம் இடதுசாரி முன்னணி பலமாக செயல்பட்டு வருகிறது.
கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை கருத்திற்கொண்டு இடதுசாரி கொள்கை உடைய மற்றும் ஒட்டுமொத்த அனைத்து இன மக்களும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாக வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம். நாடு வீழ்ச்சியடைந்தபோது நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில் ரணில் விக்ரமசிங்க தைரியமாக முன்வந்தார். அதேபோன்று அவர் குறுகிய காலத்தில் நாட்டை ஸ்திர நிலைக்கு கொண்டுவந்து, தன்னால் முடியும் என்பதை செயலில் காட்டியுள்ளார்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச்சென்றாலே நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டுவர முடியும். இந்த வேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டால் நாடு மீண்டும் வீழ்ச்சிப்பாதைக்கே செல்லும். அதனால் ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்வது இந்த நாட்டு மக்களின் கடமையாகும்.

முஸ்லிம்கள் கடந்த காலங்களில் இரண்டு ஜனாதிபதியின் கீழ் வாழ்ந்து வந்த வரலாற்றைப் பார்க்கிறோம் அந்த ஆடசியில் முஸ்லிம்களின் உரிமைகள் மறிக்கப்பட்டும் அடக்கி ஒடுக்கப்பட்டு வந்த நிலைமைகளை எங்களால் மறக்க முடியாது.

நாட்டில் இனவாத்தை ஒழித்து சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழமுடியுமான சூழலை ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே ஏற்படுத்த முடியும் என்பதை இன்று முஸ்லிம் மக்கள் உணர்ந்துள்ளனர்.
எனவே எதிர்வரும் 21ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்ய நாட்டு மக்கள் அணிதரளவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...