மக்காவில் நடைபெற்ற மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் மக்கா ஹரம் சரீபில் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சர் ஷேக் டாக்டர் அப்துல் லத்தீஃப் பின் அப்துல்அஸீஸ் ஆல் ஷேக் மற்றும் பல மார்க்க அறிஞர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.
1446 சஃபர் 5 முதல் 17 வரையிலான காலகட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 174 போட்டியாளர்களின் பங்கேற்புடன் 5 கிளைகளில் இடம்பெற்ற போட்டிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட மொத்த பரிசுகளின் தொகை 4,000,000 ரியால்கள்.
முதல் கிளையில் சவூதி அரேபியாவின் சாத் பின் இப்ராஹிம் பின் ஹமத் அல்-ருவைதி முதல் இடத்தைப் பெற்றார். அவர் 500,000 ரியால்களைப் பெற்றார். இரண்டாவது இடத்தில் நைஜீரியாவைச் சேர்ந்த நாசர் இப்ராஹிம் முஹம்மது 450,000 ரியால்களைப் பெற்றார். 400,000 ரியால் தொகையைப் பெற்ற ஜோர்டானைச் சேர்ந்த தியா தலால் ஃபாத்தி இப்ராஹிம் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இரண்டாவது பிரிவில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஜாபர் பின் ஹுசைன் அல்-மாலிகி முதலிடத்தை பெற்று 300,000 ரியால்களை வென்றார். இரண்டாம் இடத்தை நைஜீரியாவைச் சேர்ந்த அப்துல்லா சலே இப்பா பெற்று 275,000 ரியால்கள் பெற்றார். மூன்றாவது இடத்தை அல்ஜீரியாவைச் சேர்ந்த பிராஹிமி ரத்வான் பெற்று 250,000 ரியால்கள் வென்றார்.
மூன்றாவது பிரிவில் வெற்றி பெற்றவர்கள் பின்வருமாறு:
முதலிடத்தை பங்களாதேஷைச் சேர்ந்த அனஸ் பின் அதீக் (200,000 ரியால்கள்) வென்றார், இரண்டாவது இடத்தை பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மசாஹர் ஷுஐப் பிடோ வென்று அவருக்கு 190,000 ரியால்கள் வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை வென்ற அனஸ் பின் இப்ராஹிம் லிபியாவைச் சேர்ந்த மிஸ்பாவுக்கு 180,000 ரியால்கள் வழங்கப்பட்டன. நான்காவது இடத்தில் யேமனைச் சேர்ந்த ஹிஷாம் சயீத் பகூரா 170,000 ரியால்களை வென்றார். ஐந்தாவது இடத்தை மாலியைச் சேர்ந்த சுலைமான் சில்லா வென்று 160,000 ரியால்களைப் பெற்றார்.
நான்காவது பிரிவில் முதலிடத்தை பங்களாதேஷத்தைச் சேர்ந்த மோவாஸ் மஹ்மூத் பெற்று 1,50,000 ரியால்களைப் பெற்றார். இரண்டாம் இடத்தை பலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒபாடா நூர் அல்-தின் சுல்தான் (1,40,000 ரியால்) பெற்றார். மூன்றாமிடத்தை இந்தோனேசியாவைச் சேர்ந்த ஃபர்ஹான் )130,000 ரியால்களைப் பெற்றார், மேலும் நான்காவது இடத்தை மாலியைச் சேர்ந்த முஹம்மது டூர் வென்று 120,000) பெற்றார். ஐந்தாவது இடத்தை அமெரிக்காவைச் சேர்ந்த எலியாஸ் அகமது ஃபரா வென்று 110,000 ரியால்களைப் பெற்றார்.
ஐந்தாவது கிளையில் ரீயூனியனைச் சேர்ந்த பிலால் அஹமது சுலைமான் முதலிடத்தைப் பெற்று, 65,000 ரியால் தொகையையும், ஜெர்மனியைச் சேர்ந்த ஃபினாப் சாதிக் இரண்டாவது இடத்தைப் பெற்று , 60,000 ரியால் தொகையையும், மூன்றாம் இடத்தை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அலிஇம்ரான் அப்துல்லா பெற்று 55,000 ரியால்களை வென்றார். நான்காவது இடத்தை மியான்மரைச் சேர்ந்த டுட் மியாட் பெற்று 50,000 ரியால்களை வென்றார். ஐந்தாவது இடத்தை போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவைச் சேர்ந்த முஹம்மது முஸ்தபா கர்போ வென்றார். அவர் 45,000 ரியால்களைப் பெற்றார்.
இந்நிகழ்வில் இஸ்லாமிய விவகார அமைச்சர் பங்கேற்று வாழ்த்தியதுடன், சவுதி அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
அ.மு.மு.அன்சார்
(மதனி) விரிவுரையாளர், மஃஹதுஸ்ஸுன்னா பெண்கள் அறபுக்கல்லூரி-, காத்தான்குடி.