இலங்கையிலிருந்து தப்பிச் சென்று டுபாயில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுவொன்று மூத்த ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவைக் கொலை செய்ய பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
சமுதித சமரவிக்ரம கடந்த 23ஆம் திகதி பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, தனது முறைப்பாட்டில் வெளிப்படுத்தப்பட்ட கடத்தல்காரர்களின் கலந்துரையாடல் தொடர்பான காணொளியை வெளியிட்ட ஊழல் எதிர்ப்புப் படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் நாமல் குமாரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை பொலிஸாரிடம் கடந்த 24ஆம் திகதி வாக்குமூலம் பெறுவதற்கு பிலியந்தலை பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த காணொளிகள் மூலம் தேவையான எந்த நேரத்திலும் இந்த நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு உரிய தகவல்களை வழங்கத் தயார் என நாமல் குமார முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக சமுதித முறைப்பாட்டில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் குமார வெளியிட்ட காணொளியில், நாமல் குமாரவின் இலங்கை நண்பர் ஒருவர், “சமுதித ராஜபக்சவின் துணிகளை துவைக்கிறார், எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என அவருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சமுதித சமரவிக்ரம பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு முன்னர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்