follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1சமுதித சமரவிக்ரமவின் கொலைக் கலந்துரையாடல் குறித்து CID விசாரணை

சமுதித சமரவிக்ரமவின் கொலைக் கலந்துரையாடல் குறித்து CID விசாரணை

Published on

இலங்கையிலிருந்து தப்பிச் சென்று டுபாயில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுவொன்று மூத்த ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவைக் கொலை செய்ய பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

சமுதித சமரவிக்ரம கடந்த 23ஆம் திகதி பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, தனது முறைப்பாட்டில் வெளிப்படுத்தப்பட்ட கடத்தல்காரர்களின் கலந்துரையாடல் தொடர்பான காணொளியை வெளியிட்ட ஊழல் எதிர்ப்புப் படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் நாமல் குமாரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை பொலிஸாரிடம் கடந்த 24ஆம் திகதி வாக்குமூலம் பெறுவதற்கு பிலியந்தலை பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த காணொளிகள் மூலம் தேவையான எந்த நேரத்திலும் இந்த நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு உரிய தகவல்களை வழங்கத் தயார் என நாமல் குமார முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக சமுதித முறைப்பாட்டில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் குமார வெளியிட்ட காணொளியில், நாமல் குமாரவின் இலங்கை நண்பர் ஒருவர், “சமுதித ராஜபக்சவின் துணிகளை துவைக்கிறார், எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என அவருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சமுதித சமரவிக்ரம பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு முன்னர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...