follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1வடக்கில் கலப்பு மின் திட்டங்களுக்கு இந்தியாவிடம் இருந்து பணம்

வடக்கில் கலப்பு மின் திட்டங்களுக்கு இந்தியாவிடம் இருந்து பணம்

Published on

இந்திய நிதியுதவியின் கீழ் டெல்ஃப்ட், நைனாதீவு மற்றும் அனலை தீவுகளில் கலப்பின மின் திட்டங்கள் அமைக்கப்பட உள்ளன.

இது தொடர்பான முதல் தவணையை இந்தியா நேற்று (28) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஷாவினால் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷா ஜயவர்தன மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் சேபாலா ஆகியோரிடம் இது கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்த திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2022 மார்ச்சில் இலங்கையும் இந்தியாவும் கையெழுத்திட்டன.

மார்ச் 1, 2024 அன்று இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை மற்றும் யூ சோலார் கிளீன் எனர்ஜி (U-Solar Clean Energy )நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பிறகு, தீவுகளுக்கு மின்சாரம் வழங்கப்படும்.

தற்போது, ​​ஆரம்ப கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இலங்கையிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக இந்தியா 11 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...