follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஒமிக்ரோன் பற்றிய புதிய தகவல் -சந்திம ஜீவந்தர

ஒமிக்ரோன் பற்றிய புதிய தகவல் -சந்திம ஜீவந்தர

Published on

ஒமிக்ரோன் வகை திரிபு இலங்கையிலும் பிற நாடுகளிலும் வேகமாக பரவாது என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

ஒமிக்ரோன் கோவிட் வகை குறித்து தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் குழு நடத்திய சோதனையில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு பதிலளிக்கவில்லை என்றாலும்,
பூஸ்டர் தடுப்பூசியிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனினும், இந்த வைரஸ் மாறுபாடு பற்றி ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வரவில்லை என்றும், இது தொடர்பான தரவுகளைப் படிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...