follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இன்று முதல் 2 மாதங்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

இன்று முதல் 2 மாதங்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

Published on

இன்று (01) முதல் ஒக்டோபர் 31 வரை 2 மாதங்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு இன்று முதல் வீசா இன்றி நாட்டை விட்டு வெளியேற 2 மாதம் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது, தொழில் வழங்குநரின் சட்ட அனுமதியின்றி பணியிடத்தை விட்டு வெளியில் இருப்பவர்களுக்கும், பொலிஸ் முறைப்பாடுகளுக்கு உள்ளானவர்களுக்கும் அபராதம் அல்லது சட்டக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆறு மாத தற்காலிக விசா பெற்று புதிய வேலை அல்லது வாய்ப்பு கிடைக்கும்.

அதற்கு, தூதரகத்தால் வழங்கப்பட்ட உங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது அவசரகால வெளியேற்ற அட்டையுடன் குடிவரவு சேவை மையங்களுக்கு வர வேண்டும்.

வெளியேறும் அனுமதிப் பத்திரத்தைப் பெற்று 14 நாட்களுக்குள் ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு வெளியேற வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...