follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1போதைப்பொருள் அச்சுறுத்தலை அவசரமாக கட்டுப்படுத்துவது தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவினால் பெறப்பட்ட விசேட அறிக்கை

போதைப்பொருள் அச்சுறுத்தலை அவசரமாக கட்டுப்படுத்துவது தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவினால் பெறப்பட்ட விசேட அறிக்கை

Published on

நாட்டில் மதுபானம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள்களை கட்டுப்படுத்துவது தொடர்பான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை விசேட குழுவின் உறுப்பினர் ஜெயந்த சமரவீரவினால் 04.09.2024 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தப் பணியை நிறைவேற்றும் வகையில், இலங்கையில் மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான அனைத்து அரச நிறுவனங்களும் தலையிட்டதுடன், போதைப்பொருள் தடுப்புக்காகச் செயற்படும் பல சமூக அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இந்தப் பணிகளில் பங்களித்தன. இதில் ADIC முக்கிய பங்கு வகித்தது

போதைப்பொருள் ஒழிப்புக்கான அனைத்து அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒரு வருடமும் ஒரு மாதமும் பாராளுமன்றத்தில் 11 முழு அமர்வுகளையும் 4 அரை அமர்வுகளையும் நடத்தி உண்மைகளை ஆராய்ந்து அவதானித்து இந்த விசேட அறிக்கையை தயாரித்துள்ளன.

இந்த அறிக்கையில், மது, புகையிலை மற்றும் பிற போதைப் பொருட்களைத் தடுப்பதற்கான சட்டச் சீர்திருத்தங்கள், நிர்வாகச் சீர்திருத்தங்கள், கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் ஊடக நெறிமுறைகள் மற்றும் சமூக ஊடகங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கான தேவையை குறைப்பதற்கான பரிந்துரைகள், விநியோகத்தை குறைப்பதற்கான பரிந்துரைகள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கான மறுவாழ்வு மற்றும் சிகிச்சையை எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...