follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1A/L மாணவர்களுக்கு தனித்துவமான வாய்ப்பு : எதிர்வரும் 09 முதல் 20ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்

A/L மாணவர்களுக்கு தனித்துவமான வாய்ப்பு : எதிர்வரும் 09 முதல் 20ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்

Published on

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் இவ்வருடம் ஏழாயிரம் மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை அழைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு அதிகபட்சமாக பதினைந்து இலட்சம் ரூபாய் வரை, ஐந்து பிரிவுகளின் கீழ் கடன் பெறலாம் என்றும், பதினெட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பொறியியல் படிப்புகளுக்கு பதினைந்து லட்சம் ரூபாயும், அறிவியல் படிப்புகளுக்கு பன்னிரெண்டு லட்சம் ரூபாயும், தகவல் தொழில்நுட்ப படிப்புகளுக்கு பத்து லட்ச ரூபாயும் பெறலாம்.
மேலாண்மை படிப்புகளுக்கு பத்து லட்சம் ரூபாயும், சமூக அறிவியல் படிப்புகளுக்கு எட்டு லட்சம் ரூபாயும் கடன் தொகையாக வழங்கப்படவுள்ளது.

இந்தக் கடன் தொகையைப் பெறுவதற்கு இரண்டு உத்தரவாததாரர்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

தாய் அல்லது தந்தை முதல் உத்தரவாததாரராக கையொப்பமிட வேண்டும் மற்றும் கடன் தொகையை அங்கீகரிக்கும் வங்கியின் தேவைக்கேற்ப இரண்டாவது உத்தரவாததாரரை சமர்ப்பிக்க வேண்டும்.
கடன் பெற்ற இருநூற்றி தொண்ணூற்று இரண்டு மாணவர்கள் கடன் தொகையை செலுத்த தவறியதால் இம்முறை உத்தரவாததாரர்களின் தேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வருடம் எட்டாவது தடவையாக இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...