follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1A/L மாணவர்களுக்கு தனித்துவமான வாய்ப்பு : எதிர்வரும் 09 முதல் 20ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்

A/L மாணவர்களுக்கு தனித்துவமான வாய்ப்பு : எதிர்வரும் 09 முதல் 20ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்

Published on

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் இவ்வருடம் ஏழாயிரம் மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை அழைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு அதிகபட்சமாக பதினைந்து இலட்சம் ரூபாய் வரை, ஐந்து பிரிவுகளின் கீழ் கடன் பெறலாம் என்றும், பதினெட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பொறியியல் படிப்புகளுக்கு பதினைந்து லட்சம் ரூபாயும், அறிவியல் படிப்புகளுக்கு பன்னிரெண்டு லட்சம் ரூபாயும், தகவல் தொழில்நுட்ப படிப்புகளுக்கு பத்து லட்ச ரூபாயும் பெறலாம்.
மேலாண்மை படிப்புகளுக்கு பத்து லட்சம் ரூபாயும், சமூக அறிவியல் படிப்புகளுக்கு எட்டு லட்சம் ரூபாயும் கடன் தொகையாக வழங்கப்படவுள்ளது.

இந்தக் கடன் தொகையைப் பெறுவதற்கு இரண்டு உத்தரவாததாரர்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

தாய் அல்லது தந்தை முதல் உத்தரவாததாரராக கையொப்பமிட வேண்டும் மற்றும் கடன் தொகையை அங்கீகரிக்கும் வங்கியின் தேவைக்கேற்ப இரண்டாவது உத்தரவாததாரரை சமர்ப்பிக்க வேண்டும்.
கடன் பெற்ற இருநூற்றி தொண்ணூற்று இரண்டு மாணவர்கள் கடன் தொகையை செலுத்த தவறியதால் இம்முறை உத்தரவாததாரர்களின் தேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வருடம் எட்டாவது தடவையாக இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...