follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉலகம்பொலிவியாவில் தேசிய அவசர நிலை பிரகடனம்

பொலிவியாவில் தேசிய அவசர நிலை பிரகடனம்

Published on

காட்டுத் தீ பரவி வருவதால் பொலிவியாவில் தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிவியாவில் தற்போது காட்டுத் தீ பரவி வரும் நிலையில், இதனால் அழிக்கப்பட்ட காடுகளின் அளவு 3 மில்லியன் ஹெக்டேரைத் தாண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொலிவியாவில் கடந்த சில நாட்களாக கடுமையான காட்டுத் தீ பரவி வருகிறது.

இதனால் தலைநகர் லா பாஸ் உட்பட பல நகரங்களில் காற்றின் தரம் குறைந்துள்ளது.

இதன்படி, தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நாட்டில் தேசிய அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சாண்டா குரூஸ் நகரில்தான் அதிக எண்ணிக்கையிலான காட்டுத் தீ பதிவாகியுள்ளது.

தலைநகர் லா பாஸ் நகருக்கு அருகாமையில் காட்டுத் தீ பேரழிவு பதிவாகியுள்ளது, மேலும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியுள்ளது.

2010ஆம் ஆண்டுக்குப் பிறகு, பொலிவியாவில் இந்த ஆண்டுதான் அதிக காட்டுத் தீ பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுள்ளது

இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகின்றமை காரணமாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியாவில் 32 விமான நிலையங்களுக்கு பூட்டு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி...

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...