follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுதேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்

தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்

Published on

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது தயார் நிலையில் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள், தேர்தல் கட்டமைப்பு மற்றும் விதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை அடையாளம் காண்பது தொடர்பில் இடம்பெற்ற பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

எதிர்வரும் உள்ளளூராட்சி மன்ற தேர்தலுக்கு சுமார் 4 மாதங்களுக்கு முன்னரே தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியமெனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில், மாற்றங்கள் இன்றி தற்போதைய சட்ட முறைமையின் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதாக இருந்தால், 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க நேரிடும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...