follow the truth

follow the truth

July, 2, 2025
HomeUncategorizedஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொகுதி வாரியாக நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொகுதி வாரியாக நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக

Published on

இன்று (21) ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தொகுதி வாரியாக வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களிலும் வாக்கு எண்ணிக்கை இரவு 8 மணி முதல் 9 மணி வரையில் ஆரம்பிக்கப்படும் என ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் உள்ள வாக்குப்பெட்டிகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களின் எண்ணிக்கை 712,318 என சுட்டிக்காட்டிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க அவர்களில் 6,200 பேரைத் தவிர ஏனைய தபால் மூல வாக்குகள் அனைத்தும் குறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 429 வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள், ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை என அறிவித்துள்ளன. 🔹...

காமெய்னி கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பரபரப்பு பேட்டி

ஈரானுடனான 12 நாள் போரின் போது, அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமெய்னியை கொலை செய்ய குறிவைத்ததாக...

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதி பிரகடனம்

பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும்...