follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கோட்டாபய ராஜபக்ஷ நேபாளத்திற்கு விஜயம்

கோட்டாபய ராஜபக்ஷ நேபாளத்திற்கு விஜயம்

Published on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

அவர் நேற்று (23) இலங்கை விமானம் மூலம் திரிபுவன் (Tribhuvan) சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விஜயத்தின் போது நாட்டில் அமைந்துள்ள பௌத்த மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல முன்னாள் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்திற்காக நேபாளத்தில் உள்ள சௌத்ரி குழுமத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் நெருங்கிய உறவுகளைப் பேணிவருவதாகவும், அவர் இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளதாகவும் தொடர்புடைய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பயணம் அரசியல் சார்ந்தது அல்ல என்றும், தனிப்பட்ட பயணம் என்றும் myRepublica செய்திச் சேவை மேலும் தெரிவிக்கிறது.

கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ஷ சமய சடங்குகளுக்காக இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

அதன் நீட்சியாக தற்போது நேபாளம் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...

ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித்...