follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கண்டியின் பல பகுதிகளில் 65 மணிநேர நீர் வெட்டு

கண்டியின் பல பகுதிகளில் 65 மணிநேர நீர் வெட்டு

Published on

பராமரிப்பு பணிகள் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தை எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு முதல் நீரை வெளியேற்றச் செய்ய மகாவலி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக கண்டி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (27ம் திகதி) நள்ளிரவு முதல் நீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

வரட்சியான காலநிலை காரணமாகவும், ரஜரட்ட பிரதேசத்தில் விவசாயப் பணிகள் இந்த நாட்களில் முடிவடைந்ததாலும், இந்த நாட்களில் நீர்த்தேக்கத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நீர்த்தேக்கத்தில் தேங்கியுள்ள நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்படவுள்ளது.

நீர்த்தேக்கம் வெற்றிடமாக உள்ளதால், மகாவலி ஆற்றில் விளையாடுவதற்கோ மீன்பிடிப்பதற்கோ செல்வதை தவிர்க்குமாறு பிரதேசவாசிகளை மகாவலி அதிகார சபை கோரியுள்ளது.

பொல்கொல்ல நீர்த்தேக்கம் காலி செய்யப்படுவதால் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கண்டி மற்றும் பொல்கொல்ல நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் விநியோகம் இல்லாததால் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைபடும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, சனிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் செப்டம்பர் 30ஆம் திகதி மாலை 6 மணி வரை 65 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று குறித்த வாரியம் தெரிவித்துள்ளது.

கண்டி மாநகர சபை, ஹாஸ்பத்து, புஜாபிட்டிய, பாததும்பர மற்றும் அக்குரணை நீர் விநியோக அமைப்புக்கள், குண்டசாலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ராஜவெல்ல, சிறிமல்வத்தை, அம்பிட்டிய, அமுனுகம, ஹந்தான மற்றும் வளல ஆகிய பகுதிகளுக்கும், வளல இருந்து நீர் விநியோகிக்கும் மாவத்தை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...