follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1"எங்கள் அரசின் அமைச்சர்கள் ஓ.ஐ.சி.க்கு போன் செய்து இதை செய்ய வேண்டாம் இதை செய் எனச்...

“எங்கள் அரசின் அமைச்சர்கள் ஓ.ஐ.சி.க்கு போன் செய்து இதை செய்ய வேண்டாம் இதை செய் எனச் சொல்ல மாட்டார்கள்”

Published on

பொலிஸாரின் சில நடவடிக்கைகள் தொடர்பான பழைய தவறான கலாசாரத்தை தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவரும் பின்பற்ற மாட்டார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (25) மக்கள் அமைச்சின் பதவியேற்பு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு இதுவரை நடந்த தவறுகளை சரி செய்ய பொலிசாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

அத்துடன், அரசியல் அழுத்தங்களினால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் நியமனம் இதன் பின்னர் நடைபெறாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் உரிய அதிகாரிகள் துரிதமான தீர்வுகளை வழங்குவார்கள் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

பொலிஸாரின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை உடைந்து அரசியல் தலையீடுகள் நிறுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், உத்தியோகபூர்வ மட்டத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் அரசியல் தலையீடுகள் இடம்பெறாது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...