follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்திற்கு.. - ஜோசப் ஸ்டார்லிங்கின் கூற்றின் உண்மைத்தன்மை

ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்திற்கு.. – ஜோசப் ஸ்டார்லிங்கின் கூற்றின் உண்மைத்தன்மை

Published on

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மற்றுமொரு ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்புக்கு தயார் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டார்லிங் தெரிவித்துள்ளார் என பல ஊடகங்கள் இன்று (26) காலை செய்தி வெளியிட்டிருந்தன.

நாமும் இந்த செய்தியினை வெளியிட்டிருந்த நிலையில், இந்தச் செய்தி உண்மையா இல்லையா என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ள நாம் இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டார்லிங்கிடம் வினவியிருந்தோம்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தத் தயார் என்று கூறியதில் உண்மையில்லை என்ன என்று அவர் தெரிவித்திருந்தார்.

அங்கு அவர் அப்படிச் சொல்லவில்லை என்று கூறினார்.

புதிதாக பதவியேற்ற அரசால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய வேலைத்திட்டத்தின் போது ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக மாத்திரம் தெரிவித்தார்.

இருப்பினும், ஜோசப் ஸ்டார்லிங் தெரிவிக்கையில் தற்போது அவசர வேலைநிறுத்தத்திற்கு தயாராக இல்லை என்றும் கூறினார்.

இணைப்புச் செய்தி 

“புதிய அரசின் அமைச்சின் கீழுள்ள செயலாளர்களில் எமக்கு திருப்தியில்லை”
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...