follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1இலங்கை நிராகரித்த ரணிலுக்கு சர்வதேச அங்கீகாரம்..

இலங்கை நிராகரித்த ரணிலுக்கு சர்வதேச அங்கீகாரம்..

Published on

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அப்பதவியை ஏற்குமாறு அவரிடம் ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க அதற்கான விருப்பத்தை இது வரை தெரிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட்ட விதத்தை அவதானித்த பின்னரே, முன்னாள் ஜனாதிபதியின் பெயர் அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டதாக ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் செயற்பாடுகள் உலகிற்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் ஆசிய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த பொதுத் தேர்தலிலோ அல்லது தேசியப்பட்டியலிலோ போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு போட்டியிடமாட்டேன் என தான் நினைப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததாக கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன அண்மையை ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும்

நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும்...

தொழிற்கல்வி எதிர்காலத்தில் இந்த நாட்டில் தீர்க்கமான பாடமாக்கப்படும்.

தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும்...

ராகம – கந்தானை – வத்தளை பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்றிரவு(04) இராணுவ படையினர், கடற்படை, சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர்...