follow the truth

follow the truth

May, 17, 2025
HomeTOP1இலங்கை நிராகரித்த ரணிலுக்கு சர்வதேச அங்கீகாரம்..

இலங்கை நிராகரித்த ரணிலுக்கு சர்வதேச அங்கீகாரம்..

Published on

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அப்பதவியை ஏற்குமாறு அவரிடம் ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க அதற்கான விருப்பத்தை இது வரை தெரிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட்ட விதத்தை அவதானித்த பின்னரே, முன்னாள் ஜனாதிபதியின் பெயர் அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டதாக ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் செயற்பாடுகள் உலகிற்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் ஆசிய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த பொதுத் தேர்தலிலோ அல்லது தேசியப்பட்டியலிலோ போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு போட்டியிடமாட்டேன் என தான் நினைப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததாக கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன அண்மையை ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராக ரோஸ்டன் சேஸ்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக சகலதுறை வீரர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 33 வயதான சேஸ்,...

வரலாறு காணாத முதலீட்டை NPP அரசு கொண்டு வந்துள்ளது – லக்மாலி ஹேமச்சந்திரா

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நேரடி முதலீடான 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சினோபெக் திட்டம் தற்போதைய அரசாங்கத்தின்...

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...