follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP2பாதுகாப்புடைய இடத்திற்கு மாற்றப்பட்டார் அயதுல்லா அலி கொமேனி

பாதுகாப்புடைய இடத்திற்கு மாற்றப்பட்டார் அயதுல்லா அலி கொமேனி

Published on

இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில் ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஈரானிய பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய முகவர்களின் ஊடுருவல் தொடர்பில் ஈரான் அதிகாரிகள் இடையே கவலை அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நஸ்ரல்லாவின் படுகொலையை அடுத்து கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தத் தியாகியின் இரத்தத்திற்கு பதில் அளிக்கப்படும்’ என்று எச்சரித்திருந்தார்.

ஏற்கனவே ஹிஸ்புல்லா அமைப்பின் வோக்கி டோக்கி மற்றும் பேஜர் உபகரணங்கள் வெடித்த சம்பவங்களை அடுத்து அனைத்து தொடர்பாடல் சாதனங்களையும் சோதனைக்கு உட்படுத்த பாரிய அளவான நடவடிக்கை ஒன்றை ஈரான் புரட்சிக் காவல் படை முன்னெடுத்துள்ளது. இந்த உபகரணங்கள் பெரும்பாலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை அல்லது சீனா மற்றும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்று ஈரான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட்...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...