follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினை விற்பது குறித்து புதிய அரசின் தீர்மானம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினை விற்பது குறித்து புதிய அரசின் தீர்மானம்

Published on

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் குறைந்தது 51% பங்குகளை விற்பனை செய்யும் முன்னைய அரசாங்கத்தின் திட்டங்களை நிறுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அரச நிறுவன மறுசீரமைப்புப் பிரிவின் ஊடாக விற்பனை செய்ய முன்னைய அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

இதன்படி, தனியார் முதலீட்டாளரை ஈர்க்கும் நடவடிக்கையாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் உள்ள 510 மில்லியன் டொலர் கடனை பொறுப்பேற்க கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக, அதன் நிர்வாகத்தை மேலும் வினைத்திறனாக்குவதற்கான வழியைக் காண தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...