follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினை விற்பது குறித்து புதிய அரசின் தீர்மானம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினை விற்பது குறித்து புதிய அரசின் தீர்மானம்

Published on

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் குறைந்தது 51% பங்குகளை விற்பனை செய்யும் முன்னைய அரசாங்கத்தின் திட்டங்களை நிறுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அரச நிறுவன மறுசீரமைப்புப் பிரிவின் ஊடாக விற்பனை செய்ய முன்னைய அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

இதன்படி, தனியார் முதலீட்டாளரை ஈர்க்கும் நடவடிக்கையாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் உள்ள 510 மில்லியன் டொலர் கடனை பொறுப்பேற்க கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக, அதன் நிர்வாகத்தை மேலும் வினைத்திறனாக்குவதற்கான வழியைக் காண தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...