follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பேரூந்து கட்டணத்தை 04 வீதத்தால் குறைக்க கலந்துரையாடல்

பேரூந்து கட்டணத்தை 04 வீதத்தால் குறைக்க கலந்துரையாடல்

Published on

எரிபொருள் விலை குறைவினால் பேரூந்து கட்டணத்தை 04 வீதத்தால் குறைக்க முடியும் என அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

28 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச பேரூந்து கட்டணத்தை 25 ரூபாவாக குறைக்க முடியும் என அதன் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

கடந்த கட்டண திருத்தத்தின் போது ஆட்டோ டீசலின் விலை 11 ரூபாவினாலும் இன்றைய நிலவரப்படி 24 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதால் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்கும் சாத்தியம் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை குறைந்த போதிலும், டயர்கள், உதிரி பாகங்கள் மற்றும் பிற மூலப்பொருட்களின் விலைகள் இன்னும் அதிகமாகவே இருப்பதாக அதன் தலைவர் சுதில் ஜெய்ருக் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பெட்ரோலின் விலை 300 ரூபாவுக்கு கீழ் குறைக்கப்பட்டால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...