follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று நாட்டுக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று நாட்டுக்கு

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

அதன்படி, நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குநர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஒக்டோபர் 4ம் திகதி வரை நாட்டில் தங்க உள்ளனர்.

அவர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளனர்.

இலங்கையின் புதிய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கை பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மாத்திரமே நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதன் கட்டமைப்புப் பிரச்சினைகள் குறித்த விவாதம் ஒக்டோபர் மாத இறுதியில் நியூயார்க்கில் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய ஆராய்ச்சி முன்னுரிமைகளை அடையாளம் காண புதிய குழு

இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், எமது நாட்டில் முதல் முறையாக...

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டின் சிறைச்சாலைகளில் 12,000 கைதிகளை அடைக்க முடியும் என்றாலும், அற்றில் 33,000 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்...

பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

பல்கலைகழகங்களில் பகிடிவதையை தடுப்பதற்காக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டல் கோவையை கடுமையாக பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம், பல்கலைகழக மானியங்கள்...