follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு இந்தியா ஆதரவு வழங்கும்

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு இந்தியா ஆதரவு வழங்கும்

Published on

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் இன்று (04) சந்தித்துள்ளார்.

இதன்போது, புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுர குமாரவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் வாழ்த்துச் செய்திகளையும் தெரிவித்தார்.

இதன்போது, இரு நாடுகள் மற்றும் பிராந்திய மக்களின் நலனுக்காக, முன்னெடுத்துவரும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதோடு, இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பான ஜனாதிபதியின் X செய்தியில், சுற்றுலா, எரிசக்தித் துறை மற்றும் முதலீடுகள் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சருடன் யோசனைகளை பரிமாறிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு இந்தியா ஆதரவு வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில், பொருளாதாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பிலும் அவர்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...