follow the truth

follow the truth

February, 15, 2025
HomeTOP1தபால் வாக்களிப்பு விண்ணப்ப காலம் இன்றுடன் நிறைவு

தபால் வாக்களிப்பு விண்ணப்ப காலம் இன்றுடன் நிறைவு

Published on

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க வேண்டுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் சில குறைபாடுகள் காரணமாக தபால் வாக்குகளுக்கு விண்ணப்பிக்காதது அல்லது விண்ணப்பங்களை நிராகரிப்பது தேர்தல் கடமைகளிலிருந்து விடுவிக்க ஒரு காரணம் அல்ல என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுதவிர, தேர்தலுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு நியமிக்கப்படாதவர்கள் தபால் மூலம் வாக்குகளைச் செலுத்தக் கோருவதற்குத் தகுதியற்றவர்கள் என்றும், அத்தகைய அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிப்பதில்லை என்றும் அத்தகைய விண்ணப்பங்களை உறுதிப்படுத்த வேண்டாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு நிறுவன பிரதானிகளை அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆலோசனைகளுக்கமைய செயற்படத் தவறினால் அரசியலமைப்பின்படி அபராதம் அல்லது 3 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

UNP உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (14) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்...

மஹபொல புலமைப்பரிசிலை காலதாமதம் இன்றி முறையாக வழங்க நடவடிக்கை

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற...

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டுக்கு பரிந்துரைக்க நிபுணர் குழு

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிபுணர் குழுவில்...