follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் - அதிரும் இஸ்ரேல்

ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் – அதிரும் இஸ்ரேல்

Published on

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டதாகவே கூறப்பட்டது. இதற்கிடையே திடீர் திருப்பமாக இப்போது சின்வார் உயிருடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பிற்கும் இடையேயான தாக்குதல்கள் இப்போது தீவிரமடைந்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் இது மிக முக்கிய திருப்பமாகப் பார்க்கப்பட்டது. ஹமாஸ் தலைவரே கொல்லப்பட்டால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றெல்லாம் சொன்னார்கள்.

இதற்கிடையே இப்போது திடீர் திருப்பமாக ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் கட்டார் அரசை இரகசியமாக தொடர்பு கொண்டு உதவிகளைக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. காசா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலஸ்தீனியர்கள் தங்கிய பாடசாலை இஸ்ரேல் தாக்கியது. அந்த ராக்கெட் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இப்போது அதற்கு நேர்மாறான தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம் சின்வார் நேரடி தொடர்பு கொண்டதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று மூத்த கட்டார் தூதர் தெரிவித்துள்ளார். ஹமாஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான நபரான கலீல் அல்-ஹயா என்பவரே தங்களைத் தொடர்பு கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த செப். 21ம் திகதி காசாவில் நடந்த தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஏனென்றால் அந்த தாக்குதலுக்குப் பிறகு அவர் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அன்றைய தினம் ஹமாஸ் மையத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

ஆனால், பாடசாலையில் தாக்குதல் நடந்ததாகவும் அதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதாகப் பலஸ்தீனம் கூறுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...