follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2நெதன்யாகுவிடமிருந்து லெபனான் மக்களுக்கு அச்சுறுத்தல்

நெதன்யாகுவிடமிருந்து லெபனான் மக்களுக்கு அச்சுறுத்தல்

Published on

ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர்கள் உட்பட பல்வேறு இடங்களை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் செய்தி ஒன்றை வெளியிட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்களைப் பாதுகாப்பதைத் தவிர்க்குமாறு லெபனான் பொதுமக்களிடம் கூறியுள்ளார்.

இல்லை என்றால் லெபனான் மற்றொரு காசா பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது என அங்கு மிரட்டல் விடுத்திருந்தார்.

லெபனானுக்கு மேலும் தரைப்படைகள் அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஹிஸ்புல்லாஹ்வின் அடுத்த தலைவர் என்று கூறப்பட்ட ஹாசிம் ஷஃபைதீன் கொல்லப்பட்டதாக பிரதமர் நெதன்யாகு கூறுகிறார்.

எனினும் இதனை ஹிஸ்புல்லாஹ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...