2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடாது என அதன் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு விரோதமான ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்யும் சில எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி அநுர திஸாநாயக்கவை “இரண்டாம் கோட்டாபயவாக” மாற்ற விரும்புகின்றன என்பதில் சந்தேகமில்லை என அவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தமது கட்சி நாட்டின் மேலும் நெருக்கடிக்கு பங்கம் விளைவிக்காது எனவும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச தனது அறிவிப்பின் பிரதிகளை மகா சங்கரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார்.