follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுகாணாமல் போன சிறுவர்களை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

காணாமல் போன சிறுவர்களை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Published on

கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பிரதேசத்தைச் சேர்ந்த உறவுக்கார சகோதரர்களான 10 மற்றும் 12 வயதுடைய சிவர்கள் இருவர் கடந்த நவம்பா் மாதம் 23 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக கொட்டதெனியாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

காணாமல்போயுள்ள சிறுவர்களில் ஒருவரான கவீஷ சந்தகெலும் (10) என்பவர்  இறுதியாக நீல நிற டீ – ஷர்ட்டும், கறுப்பு நிறக்காற்சட்டையும் அணிந்திருந்ததாகவும், வாயின் மேற்பகுதியில் இரு பற்கள் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காணாமல்போயுள்ள மற்றைய சிறுவனான அகில தேதுனு (12) என்பவர், இறுதியாக நீல நிற கொலருடனான டீ – ஷர்ட் மற்றும் சிவப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாகவும், மேற்பக்க பல் வரிசை முன்னோக்கி சற்று நீண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்திருப்பின் கொட்டதெனியாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 071 85 91 634 அல்லது கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தின் 033 – 22 72 222 அல்லது 033 – 22 40 050 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸாா் கோரியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிராட்மன் வீரக்கோன் காலமானார்

இலங்கையின் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள், 94ஆவது வயதில் காலமானார். நாடு தவிர்க்க முடியாத...

பல பகுதிகளில் மழைக்கும் இடியுடன் கூடிய வானிலைக்கும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...

இன்று12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை,...