follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பெரும் வெள்ள அபாய எச்சரிக்கை

பெரும் வெள்ள அபாய எச்சரிக்கை

Published on

அத்தனகலு ஓயா தூனமலே பகுதியிலிருந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை) பொறியியலாளர் எஸ்.பி.சி.சுசீஸ்வர தெரிவித்துள்ளார்.

“கம்பஹா மாவட்டத்தின் ஊடாக பாயும் அத்தனகலு ஓயா பள்ளத்தாக்குக்கு கணிசமான அளவு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என நீர்ப்பாசன திணைக்களம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. கம்பஹா மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகளுக்கு இந்த வெள்ள அபாயம் இன்னும் உள்ளது.”

“திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா எல, கட்டான மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவின் தாழ்நிலப் பகுதிகளில் இன்றும் வெள்ள நிலைமை தொடரும்.”

தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமைகள் தொடர்ந்து சிறிது சிறிதாக உருவாகலாம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...