follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மூன்று வேட்பாளர்கள் தங்களின் ஜனாதிபதி தேர்தல் செலவுகள் குறித்து தெரிவிக்கவில்லை

மூன்று வேட்பாளர்கள் தங்களின் ஜனாதிபதி தேர்தல் செலவுகள் குறித்து தெரிவிக்கவில்லை

Published on

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்கள் நேற்று (13) இறுதிக்குள் தமது தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்படி, 3 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வேட்பாளர்களுக்கு செலவின அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (13) நள்ளிரவுடன் முடிவடைந்தது.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதேவேளை, இன்று (14) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, 28 அரசியல் கட்சிகள் தமது செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தலைவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள் அதற்கான செலவின அறிக்கைகளை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு முன்னர் குறிப்பிட்டிருந்தது.

அதன்படி, உரிய காலத்திற்குள் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...