அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் பதவிக்கு சந்தியா குமுதுனி ராஜபக்ஷவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக பணியாற்றிய தீபிகா செனவிரத்ன அவர்கள் 11-10-2024 முதல் ஓய்வு பெற்றார்.
இலங்கை விஞ்ஞான சேவையின் விசேட தர உத்தியோகத்தர்களின் மூப்பு பட்டியலின் படி, தற்போது அரசாங்க மேலதிக பரீட்சார்த்தியாக கடமையாற்றும் இலங்கை விஞ்ஞான சேவையின் விசேட தர அதிகாரியான பத்திரகே சந்தியா குமுதுனி ராஜபக்ஷவை நியமிப்பதற்கு, நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சராக பிரதமர் அவர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.