follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பாவிப்போர் கவனத்திற்கு

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பாவிப்போர் கவனத்திற்கு

Published on

சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களின் பாவனை நரம்புகளைப் பாதிக்கும் நோய்களை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.

கேள்விக்குரிய பெரும்பாலான கிரீம்கள் தரமற்றவையே இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின்படி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் திரவங்களில் இருக்கக்கூடிய பாதரசத்தின் அளவு ஒரு கிலோகிராம் இற்கு ஒரு மில்லிகிராம் ஆகும்.

எவ்வாறாயினும், சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களில் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவு பாதரசம் இருப்பதாக வைத்தியர் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.

தோல் புற்றுநோயின் அதிகரிப்பு மற்றும் தோல் மெலிதல், இரத்த நாளங்களின் தோற்றம் ஆகியவற்றில் அதிகரிப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதன் காரணமாக, உடனடியாக வெண்மையாக்கும் கிரீம்களில் இருந்து விலகி இருக்கவும் மருத்துவர் கேட்டுக் கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...