follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இன்றும் பாஸ்போர்ட் வரிசை - விரைவில் Online டோக்கன்

இன்றும் பாஸ்போர்ட் வரிசை – விரைவில் Online டோக்கன்

Published on

தற்போது கையிருப்பில் உள்ள வெளிநாட்டு கடவுச்சீட்டுகளுக்கான டோக்கன்களை வழங்குவது எதிர்காலத்தில் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், அவசர தேவைக்கு தவிர நவம்பர் மாதத்தில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வரவேண்டாம் என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பத்தரமுல்ல குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கொள்வனவு செய்யப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் வழங்கப்படும் என்பதால், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருமாறு அக்டோபர் 29ஆம் திகதி மக்களை அரசு கேட்டுக்கொண்டது.

ஆனால் இன்றும் பத்தரமுல்ல குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காணமுடிந்தது.

தற்போது பெறப்பட்ட கடவுச்சீட்டுகளுக்கான டோக்கன் வழங்கும் பணி எதிர்காலத்தில் ஆன்லைன் முறை மூலம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...