follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP1கோதுமை மா மற்றும் பட்டர் விலை குறைக்கப்பட்டால் பாண் 100 ரூபாவிற்கு வழங்கப்படும்

கோதுமை மா மற்றும் பட்டர் விலை குறைக்கப்பட்டால் பாண் 100 ரூபாவிற்கு வழங்கப்படும்

Published on

வரும் பண்டிகை காலத்துக்கு முன், இரண்டு உள்ளூர் கோதுமை மா நிறுவனங்களில், அரசு தலையிட்டு, கோதுமை மா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெண்ணெய்யின் (Butter) விலையை குறைத்தால், ஒரு பாணின் விலை, 100 ரூபாயாகவும், ஒரு கிலோ கேக் விலை 800 முதல் 900 ரூபாய் வரை குறைக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்தார்.

மற்றைய பேக்கரி பொருட்களின் விலையை நுகர்வோருக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில் குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விலையை குறைப்பதற்கு அரசாங்கம் நிச்சயமாக தலையிட்டு இரண்டு உள்ளுர் மாவு நிறுவனங்களினால் 195 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் கோதுமை மாவின் விலையை 150 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் வெண்ணெயின் விலையை 150 ரூபாவாகவும் குறைக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் ஒரு கிலோ கோதுமை மாவுக்கு 45 ரூபாவும், ஒரு கிலோ வெண்ணெய்க்கு 600 ரூபாவும் வரியை குறைப்பதன் மூலம் கோதுமை மா மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றின் விலையை குறைப்பதன் மூலம் கோதுமை மா மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றின் விலையை குறைக்க முடியும் என தலைவர் சுட்டிக்காட்டினார்.

எனவே எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கு முன்னர் பாண், கேக் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை குறைத்து நுகர்வோர் நிம்மதியடைய முடியும் என ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பாக தொழிலாளர் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதுமுள்ள தொழிலாளர்...

முதலைக்கு இரையாகும் முதலைகள்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்திற்கு அருகிலுள்ள களப்பில் நபர் ஒருவர் மேலும் மூன்று பேருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான துப்பாக்கிதாரியை எதிர்வரும் ...