follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுலொஹானின் பிணை மனு வரும் 19ம் திகதி விசாரணைக்கு

லொஹானின் பிணை மனு வரும் 19ம் திகதி விசாரணைக்கு

Published on

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) தீர்மானித்துள்ளது.

மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதிவு செய்யப்படாத கார் ஒன்றை கண்டெடுத்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ஷஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அன்றைய தினம், இந்த மனு தொடர்பான உண்மைகளை தெரிவிக்குமாறு சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் அறிவித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...