follow the truth

follow the truth

June, 27, 2025
Homeஉள்நாடுலொஹானின் பிணை மனு வரும் 19ம் திகதி விசாரணைக்கு

லொஹானின் பிணை மனு வரும் 19ம் திகதி விசாரணைக்கு

Published on

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) தீர்மானித்துள்ளது.

மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதிவு செய்யப்படாத கார் ஒன்றை கண்டெடுத்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ஷஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அன்றைய தினம், இந்த மனு தொடர்பான உண்மைகளை தெரிவிக்குமாறு சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் அறிவித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி, ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்கு அனுமதி

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2025 மே 19ஆம் திகதிய...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை முதலாம்...

போர்ட் சிட்டி கடலில் காணாமல் போன பல்கலை மாணவனின் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நீராடச்சென்று நீரில் மூழ்கி காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று(27)...