follow the truth

follow the truth

June, 28, 2025
HomeTOP1தெஹிவளை கால்வாயில் சாயம் ஊற்றிய நபருக்கு 25,000 ரூபா அபராதம்

தெஹிவளை கால்வாயில் சாயம் ஊற்றிய நபருக்கு 25,000 ரூபா அபராதம்

Published on

தெஹிவளை, கௌடான பிரதேசத்தில் இருந்து அத்திடிய குளம் ஊடாக கட்டு கால்வாய்க்கு செல்லும் கால்வாயில் சிவப்பு சாயத்தினை கலந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அது தொடர்பான சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையில் சிவப்பு சாயம் கலந்த கொள்கலனை அகற்றுமாறு சந்தேகநபரிடம் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சம்பந்தப்பட்ட கொள்கலனை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று வைத்துள்ளார்.

அதன் பின்னர் சந்தேகநபர் அதனை கால்வாயில் விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கால்வாயில் கிட்டத்தட்ட மூன்று நாட்களாக தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியதாக கூறப்படுகிறது. பிரதேசவாசிகள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன் பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​சந்தேகநபருக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், நீதவான் அவரை கடுமையாக எச்சரித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாரஹேன்பிட்டியில் 3வது ஒசுசல திறக்கப்பட்டது

நாடு பூராகவும் அமைந்துள்ள 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பிரதானமான தனியார்...

இறக்குமதி, ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்கு அனுமதி

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2025 மே 19ஆம் திகதிய...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை முதலாம்...