follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1சுமார் 13 மில்லியன் ரூபா கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வௌிநாட்டவர் கைது

சுமார் 13 மில்லியன் ரூபா கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வௌிநாட்டவர் கைது

Published on

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் போதைப்பொருளை கொண்டு வந்த சந்தேகத்தின் பேரில் சியரா லியோன் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்கேன் பாரிசோதனை செய்த போது, அவர் உடலில் மறைத்து போதைப்பொருளை கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

32 வயதான சந்தேகநபர், துருக்கி விமானம் ஒன்றின் ஊடாக நாட்டுக்கு வந்துள்ளார்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவர் விழுங்கிய போதைப்பொருள் அடங்கிய 17 குழிசைகள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மற்றும் போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் கொக்கெய்ன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி சுமார் 13 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...