follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடுகோதுமை மா விநியோகம் வீழ்ச்சி காரணமாக பேக்கரிகளை மூடும் நிலை!

கோதுமை மா விநியோகம் வீழ்ச்சி காரணமாக பேக்கரிகளை மூடும் நிலை!

Published on

கோதுமை மா நிறுவனங்களால் பேக்கரிகளுக்கு வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பல பேக்கரியில் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெரிய அளவிலான பேக்கரிகளுக்கு கோதுமை மாவை விநியோகம் செய்தாலும், சிறிய மற்றும் நடுத்தர பேக்கரிகளுக்கு கோதுமை மாவு இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோதுமை மாவின் தரத்தில் பிரச்சினைகள் இருப்பதாகவும் தரமற்ற கோதுமை மாவைப் பயன்படுத்துவதால், பாண் உள்ளிட்ட பேக்கரிப் பொருட்களைப் பதப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரிப் பொருட்களின் விலையை ரூபா 5 முதல் 10 ரூபா வரை அதிகரிக்குமாறு பேக்கரி உரிமையாளர்களிடம் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல...

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும்...

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...