follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1ஓய்வூதிய வயதை அதிகரித்ததுக்கு இ.நி.சே.சங்கம் எதிர்ப்பு

ஓய்வூதிய வயதை அதிகரித்ததுக்கு இ.நி.சே.சங்கம் எதிர்ப்பு

Published on

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை எதிர்ப்பதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் நிதியமைச்சின் அதிகாரிகள் தமது தொழிற்சங்கங்களுடனோ அல்லது வேறு எந்த அரச சேவை சங்கங்களுடனோ கலந்தாலோசிக்கவில்லை என அதன் தலைவர் ரோஹன டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஓய்வூதிய வயதை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்து அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அறிக்கை சமர்பிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஓய்வுபெறும் வயதை 62 ஆக குறைக்குமாறு தமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் டி சில்வா தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...